மகாதிர் முகம்மது மீண்டும் மலேசிய பிரதமராவார் என தகவல்

0 2967

மலேசியாவில் நடக்கும் அரசியல் நாடகங்களின் அடுத்த திருப்பமாக, தாம் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக, அந்தப் பதவியில் இருந்து விலகிய மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஆளும் கூட்டணியான பகாதன் ஹரப்பான் (Pakatan Harapan) தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக, கோலாலம்பூரில் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மகாதிர் முகம்மது கடந்த 1981-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரையில் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.

பின்னர், மீண்டும் 2018-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் பதவியை ஏற்றார். அதன் பின்னர் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் பதவியை ராஜினாமா செய்து, அரசரின் உத்தரவின் பேரில் இடைக்கால பிரதமராக தொடர்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments