பந்தல்கண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

0 1315

 டெல்லி - உத்தரப்பிரதேச மாநிலம் இடையேயான பந்தல்கண்ட் விரைவுச் சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்  உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட பிரதேசத்தில் ஜான்சி, சித்ரகூட் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் உள்ளன. இந்நிலையில் சித்ரகூட் நகரில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் வகையிலான 296 கிலோமீட்டர் தூர பந்தல்கண்ட் விரைவுச்சாலைத் திட்டத்துக்கு பிரதமர் மோடி சித்ரகூட் நகரில் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் விவசாயிகளுக்கு பக்கபலமாக விளங்கும் வகையில் நாடு முழுவதும் 10 ஆயிரம் விவசாய உற்பத்தி சார் நிறுவனங்களை சித்ரகூட் நகரில் இருந்து பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜ் நகரில் பிரதமர் மோடி முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments