கிராமங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் - மத்திய இணை அமைச்சர்
சரக்கு வாகன ஒட்டுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கிராமப்புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் இதுகுறித்து சாலைப் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், வருங்காலத்தில், சரக்கு வாகனங்கள் மூலமான சரக்கு போக்குவரத்து அதிகரிக்க உள்ளது என்றார்.
இதை கருத்திற்கொண்டு, சரக்கு வாகன ஒட்டுனர்களுக்கு கிராமப் புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை மத்திய அரசு தொடங்க உள்ளது என்றும் அதில் அவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்படும் என்றும் கூறினார்.
Comments