காரைக்கால் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் - மத்திய இணை அமைச்சர்
காரைக்கால் - இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.
புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
மேலும் காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தனியார் மற்றும் மத்திய மாநில அரசுகள் ஆதரவோடு செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கப்பல் பயணத்தின் மூலம் இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம் என்று கூறினார்.
Comments