கொரோனா வைரசால் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை- நிர்மலா சீதாராமன்

0 870

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மூலப்பொருள் வழங்கலும், உற்பத்திப் பொருள் ஏற்றுமதியும் பாதிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் எதிரொலியாகத் தொழில்துறையினரைத் தான் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டார். அப்போது தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள் வழங்கலும், உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டதாக எவரும் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில் மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக யாரேனும் தெரிவித்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments