சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதில் மேலும் ஒருவர் கைது

0 1831

சிறுவர் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாக மதுரையில் 3-வதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாச பட விவகாரத்தில் ஏற்கனவே நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் மற்றும் சொக்கலிங்கம் என்ற செந்தில்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின் பேரில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஓட்டுநராக பணிபுரியும் சுந்தரபாண்டி இன்ஸ்டாகிராமில் சிறுவர் ஆபாச படங்களை பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments