பாராகிளைடரில் பறந்து மின்கம்பத்தில் சிக்கிய நபர்

0 1894

அமெரிக்காவில் பாராகிளைடரில் பறந்து மின்சார வயரில் சிக்கி உயிருக்குப் போராடியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து கொண்டிருந்த போது, காற்றின் வேகத்தில் நிலைதடுமாறிய கிளைடர் அருகில் இருந்த மின்கம்பத்தில் சிக்கியது. அப்போது அதில் பயணித்தவர் மின்கம்பியில் தொட்டபோதெல்லாம் மின்சாரம் தாக்கியது.

இதனால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments