தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை இருக்கக்கூடாது - மத்திய சட்ட அமைச்சர்

0 890

தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை எதுவும் இருக்கக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி இருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய அவர், இப்படிப்பட்ட பிரிவினர் நாட்டின் நீதி பரிபாலன துறையை தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க க்கூடாது என அவர் வேண்டிக் கொண்டார்.

வெகுஜன விருப்பம், நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் கொள்கைகளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். எப்படி ஆட்சி செய்வது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருப்பதைப் போல, நீதி வழங்குவது நீதிபதிகளின் கையில் தான் இருக்க வேண்டும், அதில் பிறர் தலையீடு கூடாது என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments