தாயை அடையாளம் காண முடியாத நிர்பயா வழக்கு குற்றவாளி?

0 1882

டெல்லி திகார் சிறை சுவரில் தலையை மோதி காயத்தை ஏற்படுத்திக் கொண்ட நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் சர்மாவுக்கு (Vinay Sharma) சொந்த தாயையே அடையாளம் காண முடியவில்லை என்று அவனது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வினய் சர்மா, தலையை சுவரில் மோதி காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அவனை தாயார் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் அவன் சார்பில் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுகுறித்து திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 22ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினய் சர்மாவின் வழக்கறிஞர், சொந்த தாயையே வினய் சர்மாவால் தற்போது அடையாளம் காண முடியவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments