TNPSC முறைகேடு : மேலும் 2 வழக்குகளில் இடைத்தரகர் ஜெயக்குமார் கைது

0 1426

குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் இதுவரை 51 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரும் குரூப்-2 ஏ மற்றும் விஏஓ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குரூப்-4 விவகாரத்தில் முதற்கட்டமாக இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை காவலில் எடுத்து விசாரித்து முடித்திருந்த நிலையில், தற்போது குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு குறித்த 2 வழக்குகளிலும் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதிகோரி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனு மீது விசாரணை நடத்தி அனுமதி கிடைத்ததும், இருவரையும் குரூப்-4 முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை போன்று, குரூப்-2 ஏ மற்றும் விஏஓ தேர்வுகள் விவகாரத்திலும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையில் பல முக்கிய நபர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments