மசூத் அசார் காணவில்லை என்று பாகிஸ்தான் கைவிரிப்பு - பிரச்சினை எழுப்புமா இந்தியா?

0 719

ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என்று பாகிஸ்தான் அரசு பொறுப்பற்ற வகையில் அறிவித்ததற்கு எதிராக பிரச்சினை எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

FATF எனப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பிடம் புகார் அளிக்க இந்தியா தயாராகி வருகிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த அமைப்பின் கூட்டம் பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது. சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த தனது ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளது. பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 12 நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

ஆயினும் பாகிஸ்தானுக்கு 27 புள்ளிகள் ஆதரவு தேவைப்படும் நிலையில் இந்த அமைப்பின் ஆய்வுக் கூட்டம் பெயஜிங்கில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போது பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு அந்நாடு 14 புள்ளிகளை பெற்றிருந்தது. மசூத் அசாரை காணவில்லை என்பதால் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.இப்பிரச்சினையை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments