மசூத் அசார் அவரது குடும்பத்தாருடன் காணவில்லை - பாகிஸ்தான்

0 1762

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பிடம், பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில், 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதையடுத்து அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

இந்நிலையில் சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது, மசூத் அசாரையும், அவரது குடும்பத்தினரையும் காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments