மின்சார வாரியத்தில் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வை நடத்த எவ்வித தடையுமில்லை - அமைச்சர்

0 781

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை நடத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கமணி, 1,577 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாணை பெறப்பட்டுள்ளதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார். மேலும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 15 ஆயிரம் பேருக்கு விரைவில் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments