அரசு பேருந்தில் துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தவரிடம் விசாரணை

0 594

கன்னியாகுமரி மாவட்டம் அருகே அரசு பேருந்தில் பயணித்த தென்காசியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்தது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக - கேரள எல்லைப் பகுதியான அமரவிளைச் சோதனைசாவடியில் கேரள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தென்காசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வைத்திருந்த பேக்கில் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின. அவரை பாறசாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். தோட்டாக்களை வைத்திருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments