பெரு நாட்டில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 767

பெரு நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வடக்கில் உள்ள டம்பஸ் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

image

சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பெரு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments