செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் சென்னை - திருச்சி சென்ற அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர், வசூல் மையம், சி.சி.டி.வி. கேமரா, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.