செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண்களை கொத்தி தூக்கும் டிக்டாக் மன்மதன்...! போலீஸ் தேடுகிறது..

Jan 22, 2020 09:45:35 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டிக்டாக் மூலம் மயக்கி இளம் பெண்களை கடத்திச்செல்லும் மேரேஜ் மன்மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டிக்டாக்கில் நடக்கின்ற நாடக காதல் பின்னணி குறித்து விவரிக்கிறது.

டிக்டாக்கில் தனக்கு தானே சண்டியர் என பில்டப் கொடுத்து இளம் பெண்களை மயக்கி கொத்தாக தூக்கிச்சென்ற வழக்கில் போலீசாரால் தேடப்படும் காதல் மன்மதன் ராஜசேகர் இவர் தான்..!

 2014 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்தி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிலையில் தான் மது போதையில் சண்டையிட்டு திரிந்த ராஜசேகர், டிக்டாக் மூலம் பல பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளாதாக திடுக்கிடவைக்கிறார் மனைவி சுகன்யா..!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட ராஜசேகர், தன்னை ஒரு திரை நாயகனாக நினைத்துக் கொண்டு டிக்டாக்கில் செய்த நாடக காதல் வெறித்தனத்திற்கு பல டிக்டாக் ஏமாளி பெண்கள் சிக்கி உள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார் மனைவி சுகன்யா..

இந்த நிலையில் ராஜசேகரை தேடி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்துறையினர் சுகன்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அறந்தாங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கவிநயா என்ற பெண்ணை டிக்டாக்கில் மயக்கிய மன்மதன் ராஜசேகர், வீட்டில் இருந்து அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிர வைத்துள்ளனர்

ஏற்கனவே தனது கணவர் டிக்டாக் மூலமாக தன்னை சிங்கிள் என கூறிக்கொண்டு பல பெண்களுடன் மிங்கிள் ஆவதாக பண்ருட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அங்குள்ள போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் ராஜசேகர், தற்போது புதிதாக ஒரு பெண்ணை தூக்கி சென்றுள்ளதாக ஆதங்கம் கொள்கிறார் சுகன்யா

இந்த நிலையில் டிக்டாக்கை தடை செய்ய கோரியும், தனக்கும் குழந்தைக்கும் உரிய பாதுகப்பு அளிக்க கோரியும் காவல் கண்காணிப்பாளர் அபினவ்விடம் புகார் அளித்துள்ளார் சுகன்யா.

டிக் டாக்கில் ராஜசேகரை போன்ற மன்மதர்களை நம்பி வாழ்க்கையை பறிகொடுத்த பல இளம் பெண்கள் வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வரும் நிலையில் டிக்டாக் என்னும் வாழ்க்கைக் கொல்லி இன்னும் பல குடும்பங்களை சீரழிக்க காத்திருக்கிறது அதனிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது இந்த சம்பவம்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement