செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Oct 25, 2024 06:35:09 AM

சென்னை வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றஞ்சாட்டிய மக்கள் குடியிருப்பு முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை, மூலகொத்தளத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடடத்தின் 4 வது மாடி தரை தளத்தில் வெறும் கையால் தோண்டினால் சிமெண்டு பூச்சு மணல் போல வரும் காட்சிகள் தான் இவை..!

2018 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஜெயக்குமாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2020 ஆம் ஆண்டு கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டாலும், 2 ஆண்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடந்த 1044 குடியிருப்புகளை
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சன்சேடு இல்லாமல் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கனமழையின் போது அனைத்து தளங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி உள்ளதாக அங்கு குயிருக்கும் பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்

மேல் மாடி வரை தண்ணீர் ஏறுவதில்லை என்றும் சில வீடுகளில் ஜன்னல்களும், பாத்ரூம் உபகரணங்களும் பெயர்ந்து கையோடு வந்து விட்டதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்

காலையில் ஒருமணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே லிபட் இயக்கப்படுவதாகவும் மற்ற நேரங்களில் 11 மாடிகளையும் படி வழியாகவே ஏறி கடக்க வேண்டி இருப்பதால கடுமையாக அவதியுறுவதாக வேதனை தெரிவித்தனர்

தரமற்ற கட்டுமானத்தை கண்டித்து கம்யூனிஸ்ட்டு இயக்கத்தினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் ,குடியிருப்பு முன்பு கூடிய மக்களை அதிகாரிகளும் போலீசாரும் சமாதானப்படுத்தினர்

கட்டுமானத்தை விரைந்து சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


Advertisement
திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?
ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!
இதய நோய் சிகிச்சை பெற்ற பெண்ணை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ..
கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement