செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Oct 20, 2024 06:28:15 AM

திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பில் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி கேக்குகள் பிஸ்கட்டுகள் தயாரித்து கடை கடையாக சப்ளை செய்த இரு பேக்கரி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி ஆழ்வார் தோப்பில் உள்ள இரு பேக்கரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அழுகிய முட்டைகளை வாங்கிச்செல்வதாக உணவு பொருள் பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குள்ள ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி மற்றும் ஸ்டார் பேக்கரி தயாரிப்பு கூடத்திற்கு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்காக அங்கு தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் அழுகிய முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

அழுகிய முட்டையில் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்ய தயாராக இருந்த 215 கிலோ கேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த இரு பேக்கரிகளையும் இழுத்துப்பூட்டி சீல்வைத்தனர். ஸ்டார் பேக்கரி உரிமையாளர் அசாருதீன், ஸ்ரீரீ ஆண்டவர் பேக்கரி உரிமையாளர் கருணாகரன் ஆகியோருக்கு அபராதத்துடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.

இரண்டு பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கடைகளுக்கு மலிவு விலையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட கடைகளின் பெயர்களுடன் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Advertisement
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?
அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?
மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடனம்.. மின் கம்பம் மோதி தூக்கி வீசப்பட்ட மாணவன்..
கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில்போக்குவரத்து தொடங்கியது...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நள்ளிரவில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி - லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிப்பு
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement