செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Oct 12, 2024 10:52:11 AM

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வாகனம் மோதி உயிரிழந்த தனது குட்டியை காப்பாற்றக்கோரி தாய் நாய் நடத்திய பாசபோராட்டம் காண்போரை கண்கலங்கச்செய்தது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து வரும் நாய் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சில குட்டிகளை ஈன்ற நிலையில் ஒவ்வொன்றாக மாயமான நிலையில் , வெள்ளை நிற நாய் குட்டி மட்டும் தன் தாயோடு சுற்றி வந்தது. வெள்ளிக்கிழமை எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலக வாகனத்தில் சிக்கி அந்த நாய் குட்டியும் பரிதாபமாக பலியானது.

இதை அறியாத தாய் நாய் தன் குட்டியை எழுப்ப நீண்ட நேரமாக போராடியது, தன் வாயால் நக்கியும், கத்தி ஓலமிட்டும் குட்டியை காப்பாற்ற முயற்சித்தது.

தாய் நாயின் பாசம்போராட்டம் காண்போரை கலங்க செய்தது. தாய் நாயின் பரிதவிப்பை பார்த்த ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 பெண்கள் , முதலில் தாய் நாய்க்கு பிஸ்கட் கொடுத்து சாந்தப்படுத்தினர்

அந்த இரு பெண்களும், இறந்து கிடந்த குட்டி நாயை தூக்கி ஒரு கவரில் போட்டு எடுத்து சென்று ஆட்சியர் அலுவகத்திற்கு பின்புறம் குழிதோண்டி புதைத்தனர்.

குழிக்குள் வைத்து அந்த நாய் குட்டியை அடக்கம் செய்யும் வரை, தாய் நாயின் பெத்த வயிறு துடித்துக் கொண்டே இருந்தது தான் சோகத்தின் உச்சம்..!

தனது குட்டியை அடக்கம் செய்த பின்னரும் அந்த இடத்தைவிட்டு அகல மனமின்றி , அந்தகுட்டியை தூக்கிச்சென்ற பிளாஸ்டிக் கவரை மோப்பம் பிடித்து விட்டு, தாய் நாய் வேதனையில் அழுது ஓலமிட்டபடியே அங்கேயே சுற்றி வந்தது.

அதே நேரத்தில் மயிலாடுதுறையில் புதிய பேருந்துநிலைய கழிப்பிடத்தில் , தனக்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியோடு அனாதையாக போட்டு விட்டு தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


Advertisement
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்
வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..
ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்
பைக்கில் ட்ரிபிள்ஸ் போவோம்.. போர்ஸ் போவோம்.. பைவ்ஸ் போவோம்.. விபத்தில் சிக்கினா ஓடிப் போவோம்..! மாஸ்டர் பட தயாரிப்பாளரின் லாரி மோதியது
தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்


Advertisement