செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Sep 22, 2024 09:20:04 AM

காரைக்காலில் காதலியுடன் கடற்கரைக்கு சென்ற மாணவரை மிரட்டி காவலர் ஒருவர் பணம் பறித்த நிலையில், தகவல் அறிந்து புறக்காவல் நிலையத்துக்கு வந்த பெற்றோர் , அந்த காவலரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்.

கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த புகாருக்குள்ளான காவலரை, காதல் ஜோடியின் பெற்றோர் வறுத்தெடுத்த காட்சிகள் தான் இவை..!

காரைக்கால் கடற்கரையில் பகல் நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் தனிமையில் இனிமை காண வரும் காதல் ஜோடிகள் அங்கு செல்வதுண்டு. அவர்களை குறிவைத்து காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜ்குமார் என்ற காவலர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை காதலியுடன் சென்ற கல்லூரி மாணவரை கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற ராஜ்குமார் , அங்கு வைத்து அவர்களை மிரட்டி 3000 ரூபாய் பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு வந்த மாணவர், தன்னிடம் பணம் பறித்த காவலர், தனது காதலியின் கழுத்தில் கை வைத்து தாலி இருக்குதா பார்ப்போம் என்று எல்லை மீறி பேசியதாக அழுதபடியே பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ஆவேசமான அவர்கள் காவலர் ராஜ்குமாரை தேடி சென்றனர். அப்போது புறக்காவல் நிலையத்துக்குள் இருந்து வேறொரு காதல் ஜோடி பதற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை மறித்து விசாரித்த போது காவலர் ராஜ்குமார் , தங்களிடமும் 2500 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தனர்

இதை கேட்ட மாணவரின் நண்பர்கள் , காவலரிடம் நியாயம் கேட்க, அந்த காதல் ஜோடியை காவலர் ராஜ்குமார் அங்கிருந்து போகும்படி விரட்டினார்

இதற்க்கிடையே  மாணவரின் தாயும் தந்தையும்,  ஆவேசமாக புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து  "எம் புள்ள, அந்த பெண்ணத்தான் திருமணம் செஞ்சிக்க போறான்.. எப்படி சார், பணம் பறிப்பீங்க?" என்று கேட்டு காவலர் ராஜ்குமாரை அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்தனர்

மாணவரின் பெற்றோரின் ஆவேசத்தால், என்ன செய்வதென்று தெரியாமல் பொறியில் சிக்கிய எலியாக விழித்தபடியே அமர்ந்திருந்தார் காவலர் ராஜ்குமார்

இது குறித்து எஸ்.பியிடம் புகார் அளிப்பதாக கூறிச்சென்ற அவர்கள், வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவலர் ராஜ்குமார் மீது ஏற்கனவே செயின் பறிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement
யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்வர் - கமல்
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை - தமிழிசை
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது, விரைவில் வெடித்துச் சிதறும் - எடப்பாடி பழனிசாமி
ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Advertisement
Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..


Advertisement