செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Sep 20, 2024 07:05:20 PM

வேலூர் மாநகராட்சியில் கால்வாய் பணி, மின் வாரிய பணிகளுக்காக சாலையை கொத்தி கொத்தி வைத்துள்ளதால் நடப்பவன் அதில் விழுந்து தத்தி தத்தி போனான் என்கிற நிலை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளர்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 24 கடைகள் புதியதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடைகளை திறந்து வைத்தார். இவ்விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். விழாவில் பேசிய அவர், தனது தொகுதியில் வீதி சாலைகள் பளிங்கு போல் இருக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் எனக்கூறினார். 50 ஆண்டுகால அனுபவம் பெற்ற தன்னிடம் சாலைகள் இப்படி இருக்கிறது என எவனாவது கேட்டால் அசிங்கம் எனத்தெரிவித்தார்.

வேலூர் காந்தி நகரில் இரண்டு கழிவு நீர் கால்வாய்களையும் செப்பனிட நடவடிக்கைகளை செய்துள்ளதாக தெரிவித்த அவர் இனி மேல் எங்கும் சாக்கடை ஓடும் நிலை இருக்காது என்றார்.

மாநகராட்சி பணிகளில் சில நேரங்களில் அதிகாரிகளும், கட்சியினரும் அவசரப்பட்டு செய்வதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் தனது தொகுதி மக்களின் மனநிலையை அப்படியே படம்பிடித்து காட்டிய படி பேசியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement