செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண் மருத்துவருக்கு இன்ஸ்டா மூலம் பாலியல் தொல்லை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர் கைது கொல்கத்தா சம்பவத்தை சுட்டிக்காட்டி மிரட்டல்!

Aug 30, 2024 03:23:16 PM

சென்னையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரை கல்லூரி படிக்கும் காலத்தில் ஒருதலையாகக் காதலித்த சக மருத்துவர் ஒருவர், 9 ஆண்டுகள் கழித்து, பெண் மருத்துவரின் கணவர் மூலம் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பெண் மருத்துவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2015 பேட்ஜ்ஜில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். அப்போது அவருடன் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் மருத்துவம் படித்துள்ளார்.

படிக்கும்போது இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் சுரேஷ் குமார் பெண் மருத்துவரை ஒரு தலையாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பெண் மருத்துவருக்கு வேறொரு மருத்துவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பெண் மருத்துவரின் கணவரது இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச வார்த்தைகளும் ஆண் ஒருவரின் ஆடையில்லா படமும் வந்துள்ளது. பெண் மருத்துவரின் கணவர் அந்த ஐடியை பிளாக் செய்துள்ளார். இதையடுத்து அந்த நபர், பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை இருவரது whatsapp எண்ணிற்கு அனுப்பியதுடன், கொல்கத்தா சம்பவத்தை போன்று, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பெண் மருத்துவரின் கணவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீசார், இன்ஸ்டாகிராம் ஐடி-யின் ஐபி முகவரியை வைத்து திருவள்ளூரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த டாக்டர் சுரேஷ்குமாரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாம் ஒருதலையாகக் காதலித்த பெண்ணுக்குத் திருமணம் ஆனதை அறிந்து, 9 ஆண்டுகள் கழித்து அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது கணவர் மூலமாகவே மிரட்டல் விடுத்த மருத்துவர் தனது செயலால் கம்பி எண்ணிக் கொண்டு வருகிறார்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement