செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

“அந்த யானையை சாய்க்க இந்த தாலிச்சரடு எம் பங்குப்பா”..! ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடி கைது ஏன் ?

Aug 20, 2024 08:21:43 AM

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தன்னுடைய பங்காக ஆற்காடு சுரேஷின் மனைவி தனது தாலிச்சரடை கழற்றிக்கொடுத்து கொலை செய்ய தூண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் தென் மாவட்ட கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஜூலை 5ந்தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் அன்று ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 24வது நபராக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை பொன்னை கிராமத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தனர்.

தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்காக தெவசம் செய்ய ஆந்திராவில் பதுங்கி இருந்த பொற்கொடி வெளியே வந்த போது போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகின்றது

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்க அவரது காதலி என்று சொல்லப்பட்ட அஞ்சலையே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், ஆற்காடு சுரேஷின் மனைவியின் பங்கு என்ன என்று விசாரித்த போது சினிமாவுக்கு நிகரான சபதம் ஒன்று தெரியவந்தது.

ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் முடிந்ததும் 16வது நாள் நிகழ்ச்சி முடிந்த கையோடு பொன்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஒன்று கூடிய உறவினர்கள் மத்தியில் “தனது கணவன் கொலைக்கு பழிக்கு பழிவாங்க வேண்டும்” என்று ஆவேசமான பொற்கொடி, தனது கணவரை கொன்றவனை பழிவாங்க தனது பங்கு என்று தனது தாலி சரடை எடுத்து வைத்ததாக கூறப்படுகின்றது.

பின்னாளில் அந்த தாலி சரடை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம் ரூபாயை பொன்னை பாலுவுக்கு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தான் பொன்னை பாலுவும் அருளும் ஒவ்வொருவரையும் சந்தித்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆள் சேர்த்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பொற்கொடியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement