செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

70 பொது கழிப்பிடங்களில் சென்னையில் டபுள் வசூல்... பெண் பணி நீக்கத்தால் அம்பலம்..!

Aug 17, 2024 10:11:40 AM

சென்னையில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாதம் தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட 70 பொதுக்கழிப்பிடங்களில் பெரும்பாலானவற்றில் மக்களிடம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 700-க்கு மேற்பட்ட மாநகராட்சி பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை கடந்த காலங்களில் முறையாக பராமரிக்காமல் இருந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சில கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் ஒப்பந்தம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனியாரிடம் ஒப்படைத்தாலும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறி இதற்காக பராமரிப்பு கட்ணமாக ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி வழங்கி வரும் நிலையில் பெரும்பாலான கழிப்பிடங்களில் ஒந்த ஊழியரகளை வைத்து ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

முதற்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 70 கழிப்பிடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தினந்தோறும் அதிகளவு மக்கள் வந்து செல்லும் எழும்பூர் புறநகர் ரயில் நிலையம் எதிரே உள்ள சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பிடம் உட்பட 13 க்கும் மேற்பட்ட மாநகராட்சியின் இலவச கழிப்பிடங்களை ஒப்பந்தம் எடுத்துள்ள DR RSB PCT ONE PVT LTD., என்கிற தனியார் நிறுவனத்தின் மேற்பாரவையாளர் சீனு என்பவர் வசூல் செய்து கொடுக்க மறுத்த தன்னை பணி நீக்கம் செய்து விட்டதாக மல்லிகா என்ற பராமரிப்பு பணியாளர், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக ராயபுரம் மண்டல அலுவலர் தமிழ் செல்வனிடம் விளக்கம் கேட்டபோது, மாநகராட்சி கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் கழிப்பிடங்களில் சட்ட விரோதமாக வசூல் நடை பெறுவதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள வழக்கறிஞர் ருக்மாங்கதன், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement