செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண்ணின் அஸ்தியில் மை கலந்து மணிக்கட்டில் "தேவதை ரெக்கை டாட்டூ".. ஊருக்குள் தூக்கமின்றி சுற்றிய திகில்... டாட்டூவை அகற்றியதால் மாணவர் நிம்மதி..!

Aug 14, 2024 07:29:20 AM

சென்னையில் உயிரிழந்த உறவுக்கார பெண்ணின் அஸ்தியை மையில் கலந்து உடலில் தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவித்த நிலையில், அந்த டாட்டூவை அகற்றிய பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது...

உடலில் எங்க வேண்டுமானாலும் விருப்பப்பட்ட உருவத்தை டாட்டூ குத்திக் கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது இளசுகள் செய்யும் விபரீத செயல்களுக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர், இறந்து போன தனது உறவுக்காரக் பெண்ணின் அஸ்தியை எடுத்து வந்து மையில் கலந்து வலது கை மணிக்கட்டுக்கு பின் பக்கம் பச்சை குத்தியுள்ளார்

தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்டதோடு, கல்லறையில் எழுதுவது போல அந்த பெண் மரணித்த தேதியையும் கையில் பச்சை குத்தியதாக கூறப்படுகின்றது.

அஸ்தியால் கையில் பச்சைகுத்திய பின்னர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் தூக்கமின்றி சுற்றி உள்ளார். மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை, மாந்த்ரீக பூஜைகள் பரிகாரங்கள் செய்தும் சரியாகாமல் நாளுக்கு நாள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. உடலில் அஸ்தியால் போடப்பட்ட டாட்டூ தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் டாட்டூக்களை அகற்றும் நிபுணர் குமாரை அணுகி விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து மணிக்கட்டில் போடப்பட்ட அஸ்தி டாட்டூவை நுணுக்கமாக அழித்து அனுப்பியதாகத் தெரிவித்த குமார், தற்போது மாணவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கேட்பதற்கு அமானுஷ்யமாக இருந்தாலும், உடன்வாழ்ந்தவர்கள், மனதுக்குப் பிடித்தவர்கள் இறந்துபோனால், செய்யவேண்டிய காரியங்களை முறையாகச் செய்து, ஆத்மா சாந்தியடைய செய்வதுதான் நல்லது என்று கூறும் குமார், அதை விடுத்து அஸ்தியை மையில் கலந்து டாட்டூ போடுவதால் மனரீதியாக பிரச்சனைகள் உருவாக வழிவகுத்து அதுவே உடல் நலனை கெடுத்து விடும் என்கிறார்.

 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement