செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலி ரூ 50 லட்சம் கொடுத்த அதிமுக பெண் வழக்கறிஞர் - திமுக பிரமுகர் கைது..! பா.ஜ.க பெண் பிரமுகரை தேடும் போலீஸ்

Jul 18, 2024 07:51:16 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததாக அதிமுக பெண் வழக்கறிஞர், திமுக இலக்கிய அணி பிரமுகர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ஜ.க மகளிரணி பிரமுகரை தேடி வருவதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரவுடி சிவக்குமாரின் தாக்குதலில் இருந்து நூலிலையில் உயிர் தப்பி சாலையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்கும் இவர் தான் பெண் வழக்கறிஞர் மலர்க் கொடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது கைது செய்யப்பட்ட அருளின் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். அந்த பணம் பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ள மலர்கொடி என்பவர் மூலம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது, அவருக்கு உதவியாக இருந்த ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரனையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக திமுக இலக்கிய அணி பிரமுகரான சதீஷ் என்பவரையும் பிடித்து விசாரித்த போலீசார் மலர்க்கொடி, ஹரிகரன் , சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு மலர்கொடியின் பின்னணி விரு விருப்பானது என்கின்றனர் போலீசார். அதிமுக மேடைப்பாடகரான தோட்டம் சேகரின் 2 வது மனைவி மலர்கொடி. தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்கு பழியாக, ரவுடி மயிலை சிவக்குமாரை 19 வருடங்கள் கழித்து மலர்கொடியின் மகன் அழகு ராஜா தீர்த்துகட்டியதாகவும் தற்போது அவர் சிறையில் இருந்தவாறே தனது நெட்வொர்க்கை விரிவு படுத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருப்பதியில் வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்ட மலர்கொடி பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராக இருந்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியின் ஆட்கள் மூலம் பெருந்தொகை கைமாறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியதாக பா.ஜ.க மகளிர் அணியை சேர்ந்த அஞ்சலை என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்தடுத்து ஒவ்வொருவரையாக போலீசார் கைது செய்து வரும் நிலையில் இந்த கொலையின் பின்னணியில் கோடிக்கணக்கில் முதலீட்டாளர் பணத்தை ஏப்பம் விட்ட மலை விழுங்கிகள் பலர் தொடர்பில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement