செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கவுன்சிலர்ன்னா சும்மாவா... ஆக்கிரமிப்பை அகற்றியவரை தாக்கிய மதிமுக கவுன்சிலர்..! நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஷாக்

Jul 02, 2024 09:02:50 PM

சென்னை ஈக்காட்டு தாங்கலில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி ஓட்டுனரை,  மதிமுக கவுன்சிலர் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது

ஆக்கிரமிப்பை அகற்ற ஜே.சி.பியுடன் வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியரை மதிமுக கவுன்சிலர் தாக்கிய காட்சிகள் தான் இவை..!

சென்னை ஈக்காட்டுதாங்கல் 100 அடி சாலையில் 167 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த ஜே.சி.பி ஓட்டுனரை, பெருநகர சென்னை மாநகராட்சியின் 139 வார்டு மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி என்பவர் தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், விரட்டி விரட்டி தாக்கியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளகளில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் போலீசில் அளிக்கப்பட்டாத நிலையில் மதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 27 ஆம் தேதி தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்துக்கு இடையூறாக ஜேசிபி வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது என்றும், அதனை எடுக்கும்படி கூறிய போது ஜேசிபி ஓட்டுனர் அவதூறாக பேசியதால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும், அதனை யாரோ வீடியோ எடுத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

ஜே.சி.பி ஓட்டுனரை தாக்கியதோடு மட்டுமில்லாமல், தான் தாக்கிய காட்சியை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடமே ஒப்புதல் வாக்குமூலம் போல புகார் அளித்த கவுன்சிலர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement