செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சரோஜா சாமான் நிகாலோ.. பெண் தாசில்தார் ரூ.1 கோடி லஞ்சம் பின்னணியில் போலீஸ் கணவன்..! லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி ?

May 17, 2024 06:55:03 AM

சென்னையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்ட நிலையில் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு தாசில்தார் சரோஜா என்பவர் சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு குடியிருப்பு வாசிகளிடம் 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கடந்த 14ந்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

40 அடி அகலம் கொண்ட ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்பு சாலையில் 20 அடிக்கும் மேல் ஆக்கிரமிக்கபட்ட கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால், உங்கள் பகுதிக்கு பெரிய சாலை வசதி கிடைக்கும் உங்கள் நிலத்தின் மதிப்பும் உயரும் எனவே தனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக கூறி லஞ்சம் கேட்டதால் அவரை சிக்கவைத்ததாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்

ஒரு கோடி ரூபாய் தங்களால் தர இயலாது என கூறியபோது, தனது வீட்டுக்கு அழைத்து பேரம் பேசிய சரோஜா, இறுதியில் 20 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் அதற்கு மேல் குறைத்தால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியதாகவும், பொன் தங்கவேலு தெரிவித்தார்.

1 கோடி ரூபாய் லஞ்ச பேரத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் தாசில்தார் சரோஜாவின் கணவரான காவலர் பிரவீன் என்றும் இவர் சென்னை காவல் இணைஆணையர் சிபிசக்கரவத்தியின் சிறப்பு படையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தலைமறைவான அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement