செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்த வாய் தானே கலாய்ச்சது.. துரத்திச்சென்று வாயிலேயே வெட்டு.. இன்ஸ்டா ரவுடிக்கு நேர்ந்த சோகம்..! படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா ?

May 13, 2024 09:12:56 PM

தாம்பரம் அருகே இன்ஸ்டா ரீல்ஸில் ரவுடி போல நடித்து , தங்கள் பகுதிக்கு வரும் இளைஞர்களை கலாய்த்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்த கல்லூரி மாணவர் ஒருவரை,  3 பேர் சேர்ந்து விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தங்கள் தெருவுக்குள் வரும் இளைஞர்களை கலாய்த்து அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்த இஸ்டா ரவுடி உதயகுமார் இவர் தான்..!

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார் . 22 வயதான இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி .ஏ படித்துக் கொண்டே அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இன்ஸ்டாவில் கானா பாடல்களுக்கு ரவுடி போல நடித்து ரீல்ஸ் வீடியோ பதிவிடும் உதயகுமார், தான் வசிக்கும் பகுதிக்கு வெளிப் பகுதியில் இருந்து வரும் நபர்களை மிரட்டும் தோனியில் பேசி கலாய்ப்பதோடு, “இது எங்க ஏரியா உள்ளே வராத”.. எனக் கூறி கெத்து காட்டுவதாக வம்பிழுத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது

அந்தவகையில் தனது உறவினர் வீட்டுக்கு வந்த 24 வயது எலக்ட்ரீசியனான சேலையூர் மப்பேடு பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரின் இரு சக்கரவாகனத்தை மறித்து இது போல கலாய்த்துள்ளார். அதையும் மீறி உறவினர் வீட்டுக்கு மீண்டும் வந்த நரேஷை வழிமறித்த உதயகுமார் கேங், மீண்டும் தங்கள் ஏரியாக்குள் வர எவ்வளவு தைரியம் என கூறி இரண்டு தட்டு தட்டி மிரட்டி அனுப்பியதாக கூறபடுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ், தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணன் மற்றும் சாந்தகுமாருடன் சேர்ந்து, உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அவரது ஏரியாவுக்கு மீண்டும் சென்றுள்ளனர். அங்கு உதயகுமார் இல்லாததால் அவரை அந்த பகுதியில் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலியுடன் நின்று பேசிக் கொண்டிருந்த உதயகுமாரை, காதலி முன்பே சரமாரியாக வாயிலும் , தலையிலும் வெட்டி உள்ளனர். இதனால் அந்தப்பெண் பதறி அடித்து ஓடியுள்ளார்.

பொதுமக்கள் ஒன்று கூடவே நரேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் அருகில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சம்பவம் நடந்த இடமானது சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் மூவரையும் சேலையூர் போலீசார் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயகுமாருக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சினிமாவில் வரும் ரவுடி நாயகர்களை போல கெத்து காட்ட நினைத்து வாயில் வெட்டுப்பாட்டு உயிரை விட்டுள்ளார் உதயகுமார் அதே நேரத்தில் நட்புக்காக கையில் கத்தி எடுத்ததால் நரேஷின் கூட்டளிகளான மாணவர்கள் கிருஷ்ணன், சாந்தகுமார் ஆகிய இருவரும் கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வருவதாக போலீசார் சுட்டிக்காட்டினர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement