செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மங்காத்தா சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.1.5 கோடி வழிப்பறிக் கொள்ளை சம்பவம்..! காதலி வீட்டில் ரூ 41 லட்சம் சிக்கியது

Apr 18, 2024 06:00:39 PM

சென்னை மயிலாப்பூரில் கல்லூரி ஊழியரை தாக்கி ஒன்றரை கோடி ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை அடுத்த தாளம்பூரில் உள்ள அக்னி பொறியியல் கல்லூரியின் ஊழியர், கடந்த 2 ந்தேதி ரூ 1.5 கோடி ரூபாய் பணத்துடன் பைக்கில் கோட்டூர் புரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகி வீட்டுக்கு சென்றுள்ளார்.

வழியில் மயிலாப்பூரில் வைத்து 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து கத்தியால் தாக்கி மொத்த பணத்தையும் பறித்துச்சென்றது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையை முன்னெடுத்த போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

பணம் கொண்டுச்செல்லப்படும் தகவலை யார் சொல்லி இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரித்த போது சுனில்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் மூலம் சுனில்குமாரை தொடர்பு கொண்டு மீண்டும் கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்படுதாக பொய்யான தகவலை போலீசார் கசியவிட்டனர்.

இதையடுத்து சுனில்குமார், தனது பகுதியில் இருந்து கிளம்பி அரக்கோணம் சென்றார். அங்கு அவரை பின் தொடர்ந்த போலீசார் அவரையும், பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவனாக செயல்பட்ட திலீப் என்பவனையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்துக்கு ஸ்கெட் போட்டுக் கொடுத்த பிரபல ஹவாலா கொள்ளையன் இம்ரானையும், கூட்டாளிகள் தினேஷ்குமார், நவீன், அசோக்,உலக நாதன், குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

தேர்தல் நேரத்தில் கொள்ளையடித்த பணத்தை பிரித்து எடுத்துச்சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று செங்குன்றத்தில் உள்ள திலீப்பின் காதலி வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார் 41 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். மீதம் உள்ள பணம் எங்கே என்று விசாரித்த போது , இந்த கொள்ளை சம்பவத்தில் 3 வழக்கறிஞர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததாக தெரிவித்த போலீசார், அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி ஹவாலா பணம் கொண்டு செல்லும் நபர்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்தனர்.

அந்த வழக்கறிஞர்களின் தூண்டுதலால், மூன்று மாத காலம் திட்டமிட்டு, சிறையில் தனக்கு பழக்கமான கூட்டாளிகளை வைத்து திலீப் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறும் போலீசார் மீதம் உள்ள நபர்களை தேடிவருவதாக தெரிவித்தனர்.


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement