செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சினேகம் அறக்கட்டளை யாருக்கு..? பாடலாசிரியர் சினேகன் புகாரில் கைதான பா.ஜ.க. பெண் நிர்வாகி... பின்னணியில் உள்ளதா அரசியல்...?

Feb 21, 2024 11:50:18 AM

சினேகம் என்ற ஒரே பெயரில் இருவர் நடத்தி வந்த அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்ற தகராறில், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டதன் பின்னனி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தனது பெயரிலேயே ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் திரைப்பட பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன். கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை காவல் ஆணையரகத்தில் நடிகையும் பா.ஜ.க மகளிரணி நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது புகாரளித்தார் சினேகன். தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதால் தனக்கும் அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாக புகாரில் தெரிவித்திருந்தார் சினேகன்.

தான் 'சிநேகம் பவுண்டேஷன்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருவதாகவும் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் ஜெயலட்சுமி. எனவே, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் திருமங்கலம் போலீஸார்.

தங்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர் இருதரப்பினரும். அதில், சினேகன் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி, ஜெயலட்சுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

ஜெயலட்சுமியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்க்கவும் நீதிபதி உத்தரவிட்டதால், உதவி ஆணையர் வரதராஜன் தலைமையிலான போலீசார் நேரடியாக ஜெயலட்சுமி வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தி அதனடிப்படையில் அவரை கைது செய்தனர்.

போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட ஜெயலட்சுமி, பா.ஜ.க நிர்வாகியாக இருப்பதால் மட்டுமே தன்னை கைது செய்திருப்பதாக கூறினார்.

இந்த பிரச்னை குறித்து சமாதானம் பேசுவதற்காக 3 முறை ஜெயலட்சுமியை அழைத்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து தனது அறக்கட்டளைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டதால் நீதிமன்றத்தை நாடியதாகவும் தெரிவித்தார் சினேகன்.

நீதிபதியிடம் ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவ பரிசோதனைக்காக ஜெயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். தான் தவறு செய்ததற்கான ஒரு ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், பாஜக என்ற ஒரே காரணத்துக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ஜெயலட்சுமி.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement