செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வீட்டின் படுக்கை அறைக்குள் பளிச்சின்னு மின்னிய பேனா எடுத்து பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி..! வாடகை வீடா இனி இதையும் கவனிங்க

Feb 01, 2024 06:34:01 AM

சென்னை ராயபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த திருமணமான பெண்ணின் படுக்கை அறைக்குள் ரகசியமாக பேனா காமிராவை மறைத்து வைத்து,  உடை மாற்றும் காட்சிகளை வீடியோ எடுத்ததாக வீட்டின் உரிமையாளரின் மகனான, பயிற்சி பல்மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவில் 30 வயதான பெண் ஒருவர் தனது கணவர் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் படுக்கை அறையில் பொருட்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது அவரது வீட்டில் இதுவரை பார்த்திராத பேனா ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அது விலை உயர்ந்த பேனா போன்று இருந்ததால் அது குறித்து தனது கணவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்,

சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு வந்து அந்த பேனாவை திறந்து பார்த்தபொழுது அது கேமரா பொருத்திய பேனா என்பது தெரிய வந்துள்ளது.

அந்த கேமராவுடன் கூடிய பெண்டிரைவ்வை தனது லேப்டாப்பில் பொறுத்தி பார்த்தபோது கணவன் மனைவியின் அந்தரங்க காட்சிகள் வீட்டில் இருந்த பெண் உடை மாற்றுவது போன்ற பல வீடியோக்கள் அதில் இருந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணையில் தரைதளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரான அப்துல் சமத் என்பவரின் மகன் இப்ராஹிம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இப்ராஹிம், வீட்டுக்குள் ஆள் இல்லாத நேரத்தில் பின்வாசல் கதவிற்கான மாற்றுச் சாவியை பயன்படுத்தி உள்ளே சென்று பேனா கேமராவை படுக்கை அறையில் வைத்ததை போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ராயபுரம் போலீசார் இப்ராஹீம் மீது பெண்ணை மானபங்கம் செய்தல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இப்ராஹிம் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பல் மருத்துவம் இறுதியாண்டு பயிலும் பயிற்சி மருத்துவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில், வீட்டு உரிமையாளரின் மகன் இப்ராஹீம் நடவடிக்கையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்ததாகவும், இதை போலீசாரிடம் கூறியதால், இந்த விவகாரத்தில் பல் மருத்துவர் இப்ராஹீம் சிக்கியுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியில் செல்லும் போது கூடுமானவரை தங்கள் வீட்டின் படுக்கை அறையை சாவியால் பூட்டிச்செல்வது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர். 


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement