செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழா பேசற ராஸ்கல்.. காதை திருக்கிய ஆசிரியை சிறுவனின் காது அறுந்தது..! பதிலுக்கு பளார் விட்ட தாய்

Jan 27, 2024 05:45:41 PM

சென்னை திருவொற்றியூர் மான்போர்டு தொடக்கப்பள்ளியில் தமிழில் பேசிய 5 ஆம் வகுப்பு மாணவனை கண்டிக்கும் விதமாக  ஆசிரியை ஒருவர் மாணவனின் காதை திருக்கிய நிலையில், காது அறுந்து தொங்கியதாக பெற்றோர் புகார் அளித்தனர்

பள்ளியில் தமிழில் பேசியதால் காது அறுபட்டு சிகிச்சையில் உள்ள 5 ஆம் வகுப்பு மாணவன் இவர் தான்..!

சென்னை திருவொற்றியூர் கே. சி.பி. ரோடு அன்சா ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன் - குகன்யா தம்பதியரின் 10 வயது மகன் மனிஷ் மித்ரன். சிறுவன் மித்ரன், ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 23 தேதி பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், மனிஷ் மித்ரன் கீழே விழுந்து அடிபட்டு காயம் அடைந்து இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி பள்ளி ஆசிரியர் தாய் குகன்யா வுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளனர்.

இதனால் பதறிப்போய் ராயபுரம் நிச்சாணி மருத்துவமனைக்கு சென்ற தாய் குகன்யா, தனது மகன் மனிஷ் மித்ரனின் இடது காது துண்டாகி அறுந்து தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காதில் முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

உடனடியாக மகன் மனிஷ் மித்ரனை சென்னை தண்டையார்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் தாய் குகன்யா அனுமதித்தார் . அன்று இரவே மனிஷ் மித்ரனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து காது ஒட்டப்பட்டது . தனது மகனை தாக்கிய ஆசிரியை நாயகி ரொம்ப கண்டிப்பானவர் என்றும் தனது மகன் மனிஷ் மித்ரன் பள்ளியில் தமிழில் பேசிய நிலையில், ஆங்கிலத்தில் பேசாதது ஏன் ? என்று கேட்டு, காதை இறுக்கமாக பிடித்து திருகிய போது பலத்த காயம் அடைந்ததாக தாய் குற்றஞ்சாட்டினார்

ஆசிரியை நாயகி மீது இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே மாணவனின் தாய் குகன்யா , கன்னத்தில் அறைந்ததாக கூறி ஆசிரியர் நாயகி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தரப்பு புகார் குறித்து இராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement