செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விவாகரத்து கவுன்சிலிங்கில் கலாட்டா.. மாமியார் மருமகள் சண்டை உருண்டு புரண்டு தாக்குதல் ..!

Jan 20, 2024 10:19:23 AM

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ள நிலையில் சமாதானம் பேச கணவன் வீட்டுக்கு சென்ற இடத்தில் ஒருவருக்கொருவர் சுடு சொல் பேசியதால் மருமகளும், மாமியாரும் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சரத்குமார் இவர் வேங்கடலட்சுமி என்ற மென் பொறியாளரை, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 10 வது நாள் சரத்குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழந்த நிலையில் தனது கணவரின் மரணத்திற்கு மருமகளின் ராசி தான் காரணம் என்று மாமியார் சண்டையிட்டதால் தகராறு நீண்டது.

சில தினங்களிலேயே இருவரும் கருத்துவேறுபாடால் பிரிந்து சென்ற நிலையில், வேங்கட லட்சுமி , கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட மறுத்த சரத்குமார். தனக்கு திருமண செலவுக்காக 20 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே விவாகரத்து தருவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் வியாழக்கிழமை கணவன் வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டார் வேங்கட லட்சுமி. அவருடன் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்க மகளிர் அமைப்பு நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

தனது மனைவியை பட்டுசேலைகளைக் கிழித்து சேதப்படுத்தியதாக

சரத்குமார் புகார் தெரிவிக்க, அவர்களே செய்து விட்டு தன் மீது பழி போடுவதாக அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்று விட்டு , தங்களுக்கு சேர வேண்டியதை கொடுத்து விட்டு வீட்டுக்குள் வா.. என்று மாமியார் கூற , மருமகளும் பதிலுக்கு பதில் பேசிய நிலையில் அருகில் இருந்த கணவன், மாமனாரை அவதூறாக பேசியதால் கைகலப்பு ஏற்பட்டது.

ஒரு பக்கம் சரத்குமாரும் பெண்ணின் தம்பியும் மோதிக் கொள்ள, மறு பக்கம் மாமியாரும் மருமகளும் தலைமுடியை பிடித்துக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்

இந்த தாக்குதலில் தனக்கு கை விரல் முறிந்து விட்டதாக சரத்குமார் தெரிவித்த நிலையில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்று மாமியார் கலைச்செல்வி பதற்றம் தெரிவித்தார்.

திருமண செலவுக்கான 20 லட்சம் ரூபாயை திருப்பி கேட்கின்றனர், திருமணத்துக்கு முன்பு இருந்தது போல என்னை திருப்பி தர முடியுமா ? என்று கேள்வி எழுப்பி உள்ள வேங்கட லட்சுமி, சமாதானம் பேச சென்ற தன்னை அடித்து விரட்டிய கணவன் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

குடும்ப பிரச்சனைகள் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தையின் போது, கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அதனை விடுத்து இருதரப்பும் மாறி மாறி சுடு சொற்களை பேசினால் என்ன மாதிரியான அசம்பாவிதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement