செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாதா சிலைக்கு மாலை போட்டது குத்தமா..? அண்ணாமலை மீது FIR..! வழக்கின் பின்னணி என்ன ?

Jan 11, 2024 03:13:51 PM

என் மண், எண் மக்கள் யாத்திரையின் போது, தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு மாலை போடச் சென்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தடுத்து 3 இளைஞர்கள் வம்பிழுத்த நிலையில், அதில் ஒரு இளைஞர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் யாத்திரையின் போது, 8ந் தேதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு சென்றார்.

அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அண்ணாமலையை தடுத்து மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்

அவர்களிடம் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கிக் கூறினார் அண்ணாமலை

உடன் வந்தவர்கள் மீறிச்செல்ல முயன்ற போதும், போலீசார் அந்த இளைஞர்களை விரட்ட முயன்ற போதும் , அதனை வேண்டாம் என்ற அண்ணாமலை அந்த இளைஞர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

அவர்களில் ஒரு இளைஞர் மட்டும் சொல்பேச்சு கேளாமல் அண்ணாமலையுடன் வாக்குவாதம் செய்தார்.

ஆனால் எதிர்ப்பை மீறி அண்ணாமலை தேவாலயத்துக்குள் சென்று மேரி மாதாவுக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தார்

அப்போது இரு தரப்பும் முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது,பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

வழிமறித்து வம்பு செய்த திமுகவினரை விட்டு விட்டு, மாதாவுக்கு மாலை அணிவித்து திரும்பிய அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டதாக தருமபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசு பாதத்திற்கு எதிராக பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement