செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விஜயகாந்த் சமாதியில் சூர்யா திடீர் அழுகை .. கலாய்க்கும் நெட்டிசன்கள்..! இறப்புக்கு வராமல் நடிப்பதாக விமர்சனம்..

Jan 06, 2024 10:55:19 AM

விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சூர்யா திடீரென்று அமர்ந்து அழுத நிலையில் , சாவுக்கு வராமல் சமாதியில் நடிக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

பெரியண்ணா படம் மூலம் தன்னை விஜயகாந்த் வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததாக தனது நினைவை நடிகர் சூர்யா கண்ணீருடன் பகிர்ந்து கொண்டகாட்சிகள் தான் இவை..!

பெரியண்ணா மட்டும் அல்ல, மாயாவி படத்திலும் சூர்யாவுக்காக சிறப்புத்தோற்றத்தில் நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த்..!

விஜய்காந்த் உயிரிழந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்ததால் வர இயலாத நடிகர் சூர்யா, 9 நாட்கள் கழித்து சென்னை திரும்பியதும் விஜயகாந்தின் சமாதிக்கு அஞ்சலிசெலுத்தவந்தார்.

சமாதில் கையெடுத்து கும்பிட்டதும், துக்கம் தாளாமல் உடைந்து அழுதார் , சிறிது நேரம் சமாதியிலும் அமர்ந்தார்

பெரியண்ணா படப்பிடிப்பின் போது 8 வருடமாக அசைவமே சாப்பிடாமல் இருந்த தனக்கு , நடிகன் ஆரோக்கியமாக இருக்கனுமுன்னு சொல்லி , அவரது தட்டில் இருந்து எடுத்து தனக்கு கறி ஊட்டி விட்டதாக கூறிய போதும் நா தழு தழுக்க சூர்யா அழுதார்

சூர்யாவின் இந்த அழுகையை நடிப்பு என விஜயகாந்தின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருபோர் விமர்சிக்கின்றனர் .

இத்தனை நெருக்கமாக இருந்தவரின் இறப்புக்கு வராத சூர்யா இப்போது வந்து அழுவது யாரை ஏமாற்ற ? என்ற கேள்வியும் விவாதமும் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றது.

வெளி நாட்டிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்ற அஜீத், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோர், தமிழ் திரை உலகின் மூத்த நட்சத்திரமான விஜய்காந்தின் உயிரிழப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் தான் சாவுக்குவரவில்லை என்று ஒரு தரப்பும், சாவுக்கு வராவிட்டாலும் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த வருவது அவர்களின் சூழ் நிலையையும், ஆறுதலாகவும் இருப்பதாக மற்றொரு தரப்பும் கமெண்ட் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருவதும், வராமல் போவதும் அவரவர் விருப்பம், என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவோ விமர்சனம் என்ற பெயரில் காயப்படுத்தவோ கூடாது என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement