செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கவரிங் செயின் அணிந்து காத்திருந்து கொள்ளையனை தட்டித்தூக்கிய பெண் போலீஸ்..! ஓடும் ரெயிலில் ஒரு திகில் சம்பவம்

Nov 02, 2023 06:29:53 AM

சென்னைக்கு ரெயிலில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை, கவரிங் செயினுடன் சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இவங்க ரெண்டு பேரும் தான் கத்திக்குத்து கொள்ளையனை மடக்கிப்பிடித்த அந்த சிங்க பெண் போலீசார்..!

சென்னை வரும் ரெயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களைக் குறிவைத்து மாஸ்க் அணிந்த கொள்ளையன் ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பறித்துச்செல்வதாக புகார்கள் வந்தன. இரு மூதாட்டிகளிடம் தங்கக் கம்மலை மிரட்டி பறித்துச்சென்ற கொள்ளையன் அரசு பெண் அதிகாரி ஒருவரது கையில் கத்தியால் வெட்டி தாலிச் சங்கிலியை பறித்துச்சென்றான்.

இந்த கத்திக்குத்து கொள்ளையனைப் பிடிக்க ரெயில்வே ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில், சிங்கம் படத்தில் சூர்யாவின் வலதுகரம் போல நடித்த நிஜ டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் உள்ள காவல் ஆய்வாளரும் பெண் போலீஸ் ஒருவரும் சுடிதார் மற்றும் சேலை அணிந்து கழுத்தில் கவரிங் செயினுடன் கடந்த 10 தினங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு ரெயிலாக பயணித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே சம்பவத்தன்று அந்த மாஸ்க் ஆசாமி ஒரு ரெயிலில் வந்தான், கழுத்தில் செயினுடன் தனியாக அமர்ந்திருந்த பெண் போலீசிடம் நகையை பறிக்க முயல அவனை, பெண் காவல் ஆய்வாளருடன் மடக்கிப்பிடித்தனர். அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும் உதவினர்.

கொள்ளையனிடம் விசாரித்தபோது அவன் பெயர் ஆனந்தன் என்பதும் அவன் அன்றைய தினமும் கொள்ளைத் திட்டத்துடன் ரெயிலில் ஏறி சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். துணிச்சலுடன் மடக்கிப்பிடித்த பெண் காவலர்களுக்கும், உதவிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது

தனியாக செல்லும் பெண்கள் நகைகள் அணிந்து சென்றால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement