செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மகளிர் விடுதி பெண் ஊழியரை காட்டுத்தனமாக அடித்து உதைத்த விடுதி உரிமையாளர் ஓட்டம்..! வீடியோ வெளியானதால் திடீர் விசாரணை

Oct 13, 2023 08:03:14 AM

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் மகளிர் விடுதி பெண்ஊழியரைஅறையில் அடைத்து உரிமையாளர் கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதால் மாங்காடு போலீசாருக்கு பயந்து விடுதி உரிமையாளர் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் தங்கும் விடுதி ஊழியரை , விடுதி உரிமையாளர் கடுமையாக தாக்கும் காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். 400க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ள இந்த விடுதியில் 3 மாதங்களுக்கு முன்பு முகலிவக்கத்தை சேர்ந்த கணபதி ஜானகி என்ற பெண் பணிக்கு சேர்ந்தார். பரமசிவன் கட்டுமான தொழில் செய்து வந்த நிலையில், விடுதியில் பெரும்பாலான நேரம் கணபதி ஜானகி பணியில் இருந்ததாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் பரமசிவன், மகளிர் தங்கும் விடுதி வரவு செலவு கணக்கை சரி பார்த்த போது லட்சக்கணக்கில் பணம் குறைவது தெரியவந்தது. இதையடுத்து விடுதியில் தங்கி உள்ள பெண்களிடம் விசாரித்த போது அவர்களிடம் இருந்து மாதக்கட்டணத்தை கணபதி ஜானகி தனது வங்கிக்கணக்கில் வாங்கிக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 1 ந்தேதி கணபதி ஜானகியை அழைத்து விசாரித்த பரமசிவன் , தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டதாகவும், 2013 ஆம் ஆண்டில் இருந்து தான் நடத்தி வந்த விடுதியை கொரோனா காலத்தில் விட்டுச்சென்றதால், தற்போது தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி, அவர் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது . இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் அவரை சரமாரியாக தாக்கினார்

பதிலுக்கு பதில் பேசியதால், கணபதி ஜானகியை காட்டுத்தனமாக தாக்கத்தொடங்கிய பரமசிவன், அருகில் நின்றவர்கள் தடுத்தும் கேட்காமல் பேனாவை எடுத்து குத்தவும் முயன்ற தோடு, எட்டியும் உதைத்தார்.

ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் வெளியே எழுந்து செல்ல முயன்ற கணபதி ஜானகியை, செல்ல விடாமல் தடுத்து தலைமுடியை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளி அடித்து உதைத்தார்

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணபதி ஜானகி மாங்காடு போலீசில் புகார் அளித்தும், பரமசிவன் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணபதி ஜானகியை, பரமசிவன் காட்டுத்தனமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் போலீசார் வழக்கை தூசி தட்டினர். அதற்குள்ளாக பரமசிவன் உஷாராகி தலைமறைவானதாக கூறப்படுகின்றது. போலீசாரின் தாமதமான விசாரணையால் தாக்கியவர் தப்பிச்சென்று விட்டதாக கணபதி ஜானகி குற்றஞ்சாட்டி உள்ளார். போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய விடுதி உரிமையாளர் பரமசிவனை மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement