செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்ணாமலை இன்றி ஆரம்பமான நிர்வாகிகள் கூட்டம்! தனித்தனி பிரஸ் மீட்..! தடலாடி பேட்டிகள்..!!

Oct 05, 2023 09:30:45 PM

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வா, தி.மு.க.வா என்பது தான் போட்டியே என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதில் தமக்கு வருத்தம் ஏதுமில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கூடியது பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் கூட்டம். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் காலை 10-30 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணாமலை கூட்டத்துக்கு வர தாமதம் ஆன நிலையில், அண்ணாமலை வருவதற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடி கூட்டத்தை தொடங்கினர்.

கேசவ விநாயகம், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிலையில், சுமார் 11-45 மணிக்கு அண்ணாமலை கூட்ட அரங்குக்கு வந்தார்.

கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் வெளியே அழைத்துவரப்பட்டு, அண்ணாமலையை வரவேற்க நிறுத்திவைக்கப்பட்டனர்.

தாமதமாக வந்த அண்ணாமலையை, வாசலில் பூங்கொத்துகளை வழங்கியும் மலர்களைத் தூவியும் பா.ஜ.க.வினர் வரவேற்றனர்.

அண்ணாமலையைக் கண்டதும், இ.பி.எஸ்.ஸுடன் கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.

பா.ஜ.க. தொண்டர்களின் கூட்டத்தில் மிதந்தபடி அண்ணாமலை சரியாக 12 மணிக்கு மேடைக்கு வந்தடைந்தார். வந்ததும் தனது பேச்சை துவக்கியவர், கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, கூட்டணி குறித்த தமது கருத்தை தாம் ஏற்கனவே ஆழமாக கூறிவிட்டதாக தெரிவித்த அண்ணாமலை,மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

அண்ணாமலை பேசி முடித்த நிலையில், பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் மற்றொரு அறையில் செய்தியாளர்களை திடீரென சந்தித்தனர். ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி பேசவில்லை என்று தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஏன் அண்ணாமலை பங்கேற்கவில்லை? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிறிது நேரம் பேசினாலே அண்ணாமலைக்கு இருமல

பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த அடுத்த நிமிடம், கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அண்ணாமலை, மாஸ்க் அணிந்தவாறு திடீர் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்.

2024 தேர்தலில் பா.ஜ.கவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டியே என்று அண்ணாமலை கூறினார்.

ஒரு ஆலோசனைக்கூட்டம், இரண்டு செய்தியாளர்கள் சந்திப்பு.. என குழப்பத்துடன் பாஜக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்..


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement