செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மழைக்கு ஒதுங்கினோம்.. அப்படியே சரிஞ்சிருச்சு.. உயிர்ப் பலி வாங்கிய பங்க்..! பெட்ரோல் நிலைய கூரை சரிந்த சோகம்

Sep 30, 2023 10:38:18 AM

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து விழுந்ததில் பங்க் ஊழியர் பலியானார். மழைக்கு ஒதுங்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து  விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அஸ்வினி ஆயில் ஏஜென்சி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் சிலர் இந்த பெட்ரோல் பங்கின் கூரைக்குக் கீழ் தஞ்சமடைந்தனர். அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பெட்ரோல் பங்கில் கூரை அடியோடு அப்படியே உடைந்து சாய்ந்தது.
இதில் ஊழியர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள், மழைக்காக ஒதுங்கியவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்புத்துறையினர் கிரேன் உதவியுடன் கூரையைத் தூக்கி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பங்க் ஊழியர் கந்தசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பலத்த காயமடைந்த 8 பேருக்கு ராயப்பேட்டை மற்றும் கிண்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், 17 ஆண்டுகள் பழமையான மேற்கூரை இரு தூண்களில் மட்டும் நின்றதாகவும், அவை பலமிழந்து கீழே சாய்ந்ததால் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவித்தார்

பெட்ரோல் பங்க் என்பதால் கூரைக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க வெல்டிங் சாதனங்களைப் பயன்படுத்தாமல், கிரேனைப் பயன்படுத்தி தூக்கியதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, கவனக்குறைவால் விபத்து மற்றும் உயிரிழப்பு நேர காரணமானதாக வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகிய இருவரிடமும் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் கூரைகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement