செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மீண்டும் சிக்கலில் மகாலட்சுமியின் கணவர்..! மோசடி புகாரில் கைதான ரவீந்தர் சந்திரசேகர்..!

Sep 08, 2023 07:45:26 AM

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமான ரவீந்தர் சந்திரசேகர், ஃபேட்மேன் என்ற பெயரில் யூ-டியூபில் சினிமா விமர்சகராகவும் இருந்து வருகிறார்.

லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் ரவீந்தர் சந்திரசேகர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2020-ஆம் ஆண்டு ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு அறிமுகமானபோது நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்தத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறியதாக தெரிவித்துள்ளார்.

தன்னை நம்பு வைப்பதற்காக திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்ற பெயரில் புனையப்பட்ட ஆவணங்களை காண்பித்ததாகவும், அதன் பேரில் 16 கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்ததாக பாலாஜி தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய குற்ற பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பாலாஜியின் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக கொடுத்த புகாரில் தன்னிடம் 20 லட்சம் வாங்கிக் கொண்டு ரவீந்தர் சந்திரசேகர் மோசடி செய்து விட்டார் என குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான வழக்கும் விசாரணையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு வழக்கில் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement