இந்தியாவின் பெயரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும், ஆனால் தங்களுடைய நாடு தமிழ்நாடு தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பாரத் என்று பெயர் வைத்து விட்டால் எல்லாம் மாறிவிடுமா என்று வினவினார்.