செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரும்பு பெட்டியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை! 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!! மீண்டும் புழலில் செந்தில் பாலாஜி!

Aug 12, 2023 09:17:48 PM

செந்தில் பாலாஜி வழக்கில் மூவாயிரம் முதல் நாலாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற்று கடந்த 7-ஆம் தேதி செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்தனர் அமலாக்கத்துறையினர்.

சென்னை சாஸ்திரி பவனின் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி 300-க்கும் அதிகமான கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் பதில் பெற்றனர். இவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும் பணியை துணை இயக்குனர் கார்த்திக் தசாரி தலைமையிலான அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்றம் அனுமதித்த கஸ்டடி காலம் முடிந்ததன் பேரில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரு புறமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு வர, இளம் பர்பிள் நிறச் சட்டையும் கருப்பு பேன்ட்டும் அணிந்திருந்த செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் துன்புறுத்தினார்களா என்று நீதிபதி அல்லி கேட்டார். அதற்கு இல்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கில் 3000 முதல் 4000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை இரும்பு டிரங்க் பெட்டியில் எடுத்துச் சென்று தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் மட்டுமே முக்கியமாக இடம் பெற்றிருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் பேரில் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறையினர் கஸ்டடி எடுக்கும் முன் இருந்ததைப் போலவே, சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டு இருப்பதாக புழல் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

செந்தில் பாலாஜி தரப்பில் வரும் 16-ஆம் தேதிக்குப் பின்னர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement