செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இளைஞனைக் கடத்திய முன்னாள் காதலி... 4 பேர் மீது போலீசார் வழக்கு

Aug 12, 2023 01:24:29 PM

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மென் பொறியாளர் பார்த்திபன்- பிரியா ஆகியோரது திருமணம் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பார்த்திபன் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது காரில் வந்த கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது.

இதனை கண்ட பார்த்திபனின் தாயார் ஆஷா பிந்து அதிர்ச்சியடைந்து காரை தடுத்து நிறுத்த முயன்ற போது, நிற்காமல் சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்றது. இதில் காயமடைந்த ஆஷா பிந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பிரியா வேளச்சேரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்த்திபனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் உட்பட 4 பேரை கைது செய்து பார்த்திபனை மீட்டனர்.

இந்த கடத்தலில் ஈடுபட்டது பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா தலைமையிலான குழு என்பது தெரிய வந்தது. கடத்தப்பட்ட பார்த்திபன், கல்லூரியில் படிக்கும் போது ராணிப்பேட்டையை சேர்ந்த சவுந்தர்யா என்பவரை 7 வருடங்களாக காதலித்து வந்ததும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தனது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சுமுகமாகப் பிரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பார்த்திபன் கடந்த ஜூலை மாதம் பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் சவுந்தர்யா பார்த்திபனுடன் ஏற்பட்ட காதலை மறக்க முடியாமலும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் பார்த்திபனை கடத்தி திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த சவுந்தர்யா வந்ததாக கூறப்படுகிறது. தாயார் உமா, துணை ராணுவ வீரரும் மாமன் மகனுமாகிய ரமேஷ், நங்கநல்லூரைச் சேர்ந்த கார் ஓட்டுனரான சித்தப்பா சிவகுமார் ஆகியோருடன் சேர்ந்து பார்த்திபனை காரில் கடத்தி இருப்பதும் தெரிய வந்தது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று பார்த்திபனை மிரட்டி சவுந்தர்யா திருமணம் செய்ய முயன்றது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் உதவியுடன் வேளச்சேரி போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

சவுந்தர்யா, அவரது தாயார் உமா, உறவினர்கள் ரமேஷ் மற்றும் சிவகுமார் ஆகிய நான்கு பேர் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது பார்த்திபனை விட்டு சவுந்தர்யா பிரிந்து விடுவதாக கூறுவதால் வேளச்சேரி போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement