செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சட்டங்கள் கடுமையானால் விபத்தில் தப்பும் வில்லன்களின் ஸ்பீடு கொட்டம் அடங்கும்..! வெறும் ரூ.5,000 தான் அபராதமாம்

Aug 05, 2023 09:12:58 AM

வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பும் நபர்கள் கைது செய்யப்பட்டால் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் என்பதால் அதனை கட்டிவிட்டு எளிதாக ஜாமீனில் சென்று விடுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், விபத்து வழக்குகளுக்கான சட்டபிரிவுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துக்கு உணவு வாங்க சென்ற இளைஞர் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதிவிட்டு தப்பிச்சென்றனர். விபத்தில் சிக்கியவரை யாரும் காப்பாற்ற முன்வராததால் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய இருவர் மீதும் விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற சட்டப்பிரிவு 304a, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதற்கான 134 ஆகிய சட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் வெறும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு காவல் நிலைய ஜாமீனில் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது

 

அதேபோல் அரும்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிவிட்டு கிரேன் நிற்காமல் சென்ற நிலையில், மூதாட்டி உயிரிழந்தார். நான்கு நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்ட அந்த நபரும் இதே போல உடனடியாக பிணையில் சென்று விட்டார். வாகன விபத்து ஏற்படும் போது காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவிக்கு அனுப்பி வைப்பதும், காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதும் விபத்தை ஏற்படுத்தியவரின் கடமை என மோட்டார் வாகனச் சட்டம் சொல்வதாகவும், சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்கள் தாக்கும் சூழல் இருந்தால் மட்டுமே அதிகபட்சமாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் சரணடையலாம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

மேற்கண்ட இரு வேறு சம்பவங்களிலும் கோல்டன் ஹவர்ஸ் என சொல்லப்படும் விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் உயிரை காப்பாற்றியிருக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிவேகத்திலும், கவனக்குறைவாலும் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்துபவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தால் அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்று 24 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையிடம் சிக்கும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினால் அவர் விபத்தின் பொழுது குடிபோதையில் இருந்தாரா ? என்பதை கண்டுபிடிக்க முடியாது.

விபத்தில் சிக்கியவர்களை சாலையில் செல்பவர்கள் யாராவது மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினால் அவர்களுக்கு வெகுமதியாக மத்திய மாநில அரசுகள் தலா 5000 வீதம் மொத்தம் பத்தாயிரமாக வழங்கும் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு காயம்பட்டவரை காப்பாற்றாமல் தப்பிச்சென்று அவர் உயிர் இழப்பதற்கு காரணமாகும் நபர்கள் மீது பதிவு செய்யப்படும் சட்ட பிரிவுகளை பிணையில் வர முடியாத சட்டப்பிரிவுகளாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களும், விபத்துக்களும் குறையும்!

 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement