செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது... நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதி

Jun 14, 2023 02:34:00 PM

அமைச்சர் செந்தில்பாலாஜி  வீட்டில் பலமணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது நெஞ்சுவலிப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்ததை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசித்து வரும் அரசு பங்களாவில் நேற்று காலை சுமார் 8 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 18 மணி நேரமாக நீடித்த சோதனைக்குப் பின் அதிகாலை 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது அவர் நெஞ்சுவலிப்பதாக கதறித் துடித்தார்.

இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவரை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். உடனடியாக செந்தில்பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும், அவர் மீதான வழக்கை சட்டப்படி திமுக எதிர்கொள்ளும் என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்பி, செந்தில் பாலாஜி கைதில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்றார்.

இதனிடயே, தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையிலும், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 18 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின், 3 தோல் பைகள், இரண்டு கைப்பைகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும், ஒரு ஹார்ட் டிஸ்க் மற்றும் ஒரு மடிக்கணினியை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து,ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement