செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சொகுசு காரில் ஏறி மெரினா போறீங்களா..? இதை மட்டும் செய்யாதீங்க...! உஷார்... போலி பார்க்கிங் ஊழியர்கள்...

May 17, 2023 02:22:11 PM

சென்னை மெரினா கடற்கரையில் காரை பார்க்கிங் செய்யும் மாநகராட்சி ஊழியர் எனக் கூறி, யாராவது காரின் சாவியை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆசிரியரை ஒருவர் அப்படி கொடுத்துவிட்டு தனது  இன்னோவா காரை பறிகொடுத்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவினர்களுடன் மெரீனா கடற்கறைக்கு வந்து செல்லும் நிலையில் தான், கன்னியாகுமரி ஆசிரியையிடம் மோசடியாக கார் களவாடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்த ஆசிரியை சுமித்ரா தங்கஜோதி, சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் வந்துள்ளார்.

மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க தனது காரில் உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சுமித்ரா காரை நிறுத்துவதற்காக இடம் தேடுவதை வைத்து அவர் வெளியூர்காரர் என்பதை தெரிந்து கொண்ட ஆசாமி ஒருவன் தன்னை மாநகராட்சியில் பணிபுரியும் பார்க்கிங் ஊழியர் என கூறி அறிமுகமாகி இருக்கிறான்.

காரை சரியான இடத்தில் பார்கிங் செய்து தருவதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளான். இதனை நம்பி சாவியை கொடுத்து விட்டு சென்ற ஆசிரியை திரும்ப வந்து பார்த்தபோது காரையும் காணவில்லை, கார் பார்க்கிங் ஊழியர் என்று கையில் சாவியை வாங்கியவரையும் காணவில்லை.

தனது கார் களவாடப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை சுமித்ரா, இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நூதன கார் திருட்டு சம்பவம் தொடர்பாக உஷாராக இருக்குமாரு எச்சரித்துள்ள போலீசார், மெரீனா கடற்கரைக்கு வரும் மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் , நல்ல தரமான பூட்டு கொண்டு பூட்டிச்செல்ல வேண்டும் என்றும் கார்களை எடுத்து விடுவதற்கு என்று மாநகராட்சி எந்த ஒரு பார்க்கிங் ஊழியரையும் பணிக்கு அமர்த்தவில்லை என்றும் அது போல யாராவது சாவிகளை கேட்டால் கொடுக்க வேண்டாம் உஷாருடன் நடந்து கொள்ள போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement