செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவு வாங்கிய குடி.... கால் தவறி விழுந்த இளைஞர் பலி...

Apr 15, 2023 08:04:38 PM

தமிழ்நாட்டில் குடிபோதையால் மேலும் ஒரு உயிர் பலியாகி உள்ளது. இம்முறை மது அரக்கன் காவு வாங்கி இருப்பது, சென்னையில் வசித்து வந்த 25 வயதே ஆன இளைஞர் ஒருவரை. குடிபோதை தலைக்கு ஏறி இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த நபர், தலையில் படுகாயமடைந்து பலியானார்.

கதறி அழும் இந்தத் தாய், தன் தலைமகனை மதுவுக்குப் பறிகொடுத்தவர். கும்பகோணம் மதகுச் சாலையைச் சேர்ந்த இவரது கணவர், மகன்கள் இருவர் என எல்லோருமே ஓட்டுனர்களாக தொழில் செய்பவர்கள். இதில் மூத்த மகன் ரகுநாத், டிப்ளமோ படித்துவிட்டு, சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் நண்பர்களுடன் தங்கி, வாடகை வாகனம் ஒன்றை ஓட்டி வந்தார்.

தமிழ்ப் புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதால் வியாழன் இரவு ரகுநாத் அதிகளவில் குடித்திருந்நதாக கூறப்படுகிறது. அதே போதையில், தான் தங்கி இருந்த வாடகை வீட்டின் 2-வது மாடிக்கு ஃபோன் பேசுவதற்காகச் சென்றவர், நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். தலையில் படுகாயமடைந்த ரகுநாத், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இறந்த ரகுநாத்துக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஊரெல்லாம் புத்தாண்டு பிறந்ததை வரவேற்கும் நிலையில், தன் வயிற்றில் பிறந்த மகனை மதுபோதைக்கு வாரிக் கொடுத்த தாய்க்கு ஆறுதல் சொல்ல, ரகுநாத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் யாராலும் முடியவில்லை. இன்னும் எத்தனை உயிர்களை குடிப்பழக்கம் பலி வாங்கும் என்ற சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு இதுவரை விடையுமில்லை.


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...
பெரியாருக்கு விஜய் 'முதல் மரியாதை'.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை.. விஜயின் அரசியல் பாதை என்ன?
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement