செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஜாக்குவார் காரில் வந்து விவிஐபி வீடுகளில் கொள்ளை.. பலே வடமாநில கும்பல் கைது..!

Feb 21, 2023 10:41:51 AM

சென்னையை அடுத்த நீலாங்கரையில் மிக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளை மட்டுமே குறிவைத்து ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி நீலாங்கரை புளூ பீச் சாலை கேசுவரினா டிரைவ் பகுதியில் ஜாக்குவார் காரில் நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அங்குள்ள டிவி.எஸ் குழும உரிமையாளரின் வீடு, தோல் தொழிற்சாலை உரிமையாளரின் வீடு மற்றும் தொழிலதிபர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளது. இதில் தோல் தொழிற்சாலை உரிமையாளர் நையார் சுல்தான் என்பவர் வீட்டில் மட்டும் 1000 ரூபாய் மற்றும் வாசலில் இருந்த செருப்பை அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் ,அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த எண் போலி பதிவெண் என்பதும், புழல் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரித்த போது கார் உரிமையாளர் உத்தரபிரதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்பதும், சிறையில் பழக்கமான உத்தரபிரதேச கொள்ளை கும்பல் தலைவன் சஞ்சய் யாதவிடம் காரை கொடுத்ததும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு டோல்கேட்டில் பதிவான பாஸ்டேக் விவரங்கள் மூலம் காசியாபாத்தில் பதுங்கி இருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கொள்ளையன் ராஜேஷ் குமார் யாதவ் மற்றும் புனித் குமாரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் 2 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் யாதவ் தலைமையில் 3பேர் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. வடமாநிலங்களில் மட்டுமே கைவரிசை காட்டி வந்த இந்த கும்பல், கூகுள் மேப் மூலமாக சென்னையில் வி.வி.ஐபி ஏரியாக்களை தெரிந்து கொண்டு ஜாக்குவார் கார் மூலமாக நீலாங்கரை பகுதிக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டதும், குறிப்பாக 80ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000 ரூபாய் மற்றும் செருப்பு ஜோடியை மட்டும் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் சஞ்சய் யாதவ் மற்றும் இர்பான் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
போலீசுக்கு பயந்து காருடன் சர்ர்ர்ர்.. மடக்குடியால் விழுந்த தர்ம அடி போதையால் பாதை மாறிய பயணம்..! பெங்களூரு பாய்ஸின் சோகங்கள்
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement